தந்தையுடன் தகாத உறவு...இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த மகன்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தந்தையுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண்ணை மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு பாகம்பிரியாள் என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மகாலிங்கம் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
இதற்கிடையில் பாகம் பிரியாளுக்கு, அண்ணா நகரைச் சேர்ந்த சேகர் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். இதனை சேகரின் மகன் சுப்பிரமணி பார்த்ததுமட்டுமல்லாமல், தந்தையுடன் பழகும் பாகம்பிரியாளை பலமுறை கண்டித்துள்ளார்.
இருப்பினும் தொடர்ந்து இருவரும் பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி இன்று மருதுபாண்டியர் நகரில் இருந்த பாகம்பிரியாளை அரிவாளால் வெட்டினார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாகம்பிரியாளை அங்கிருந்தவர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாகம்பிரியாள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், கொலை குற்றவாளியான சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.