மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் பறிப்பு... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு...

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் பறித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் பறிப்பு... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு...

மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி 65 வயது மூதாட்டியான இவர் நத்தம் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள வங்கியில் தனது கணக்கில் செலுத்துவதற்காக 40 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் தான் வங்கி ஊழியர் என்றும், பணத்தை செலுத்தி விடுவதாகவும் கூறி பணத்தையும் சேமிப்பு கணக்கு புத்தகத்தையும் வாங்கி சென்றுள்ளார்.

இதனை உண்மையென நம்பி மூதாட்டி பணத்தை அளித்த நிலையில் அந்த நபர் நீண்ட நேரமாகியும் வராததால் மூதாட்டி ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.