பப்ஜி மதனிடம் விடிய விடிய விசாரணை... வாக்குமூலம் வீடியோ பதிவு...

பப்ஜி மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி அவனது வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்தனர்.

பப்ஜி மதனிடம் விடிய விடிய விசாரணை... வாக்குமூலம் வீடியோ பதிவு...
பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை யூ-டியூப்பில் பதிவிட்டு வந்தவர் மதன். பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக மதனின் வீடியோக்கள் இருப்பதாக கூறி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து பப்ஜி மதன் மீது ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு தேடி வந்தனர்.
 
வி.பி.என் சர்வரை பயன்படுத்தி தலைமறைவாக இருந்து வந்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று தர்மபுரியில் உறவினரின் வீட்டில் வைத்து கைது செய்து நேற்றிரவு சென்னை காவல் ஆணையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் விடிய விடிய பப்ஜி மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 
ஆபாசமாக பேசி வெளியிட்ட வீடியோக்கள் குறித்தும், வீடியோக்களில் ஆபாசமாக பேசக்கூடிய பெண்களுக்கு பணம் வழங்கினாரா? என்பது குறித்தும் விசாரணையை நடத்தியுள்ளனர். மேலும் புகழ்ந்து பேசுபவர்களுக்கும், சப்ஸ்கிரைப் செய்பவர்களுக்கும் மதன் பணம் வழங்கியது குறித்தும் மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் மதன் மனைவி கிருத்திகா மட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பெண் தோழிகள் யார் யார் எனவும் துருவித் துருவி விசாரணை நடத்தி, மதனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
 
மேலும் மதனை மதியத்திற்குள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மதனின் மனைவி கிருத்திகாவையும், மதனையும் ஒன்றாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.