மசாஜ் மோகத்தில் பணத்தை இழந்த முதியவர்...

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே பர்னிச்சர் கடை உரிமையாளர் ஒருவர் செல்போன் அழகியை நம்பி விவகாரத்தில் சிக்கியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மசாஜ் மோகத்தில் பணத்தை இழந்த முதியவர்...

திருப்பூர் : குன்னத்தூர் அருகே உள்ள அவரப்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ். 63 வயதான இவர் அந்த பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டாம்பாளையத்தில் பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், சண்முகராஜூக்கு கடந்த 24-ம் தேதியன்று திவ்யா என்ற பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது. அதுவரை கடையின் மீதே கண் வைத்திருந்த சண்முகராஜூக்கு திவ்யாவின் மீது கடைக்கண் பார்வையை வைத்தார். 

மறுமுனையில் பேசிய திவ்யா, உங்களுக்கு மசாஜ் செய்வதற்கு ஆசையிருந்தால் சொல்லுங்கள்.. வெறும் 1200 ரூபாய் போதும்.. உங்கள் விருப்பத்தின் படி அனைத்தையுமே அற்புதமாக செய்து விடுவேன் என இளமை தூக்கலாக பேசியிருக்கிறார் அந்த அம்மணி. 

மேலும் படிக்க | நடிகை வாய்ப்புத்தருவதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சினிமா தயாரிப்பாளர்...!

குரலே குளுகுளுவென இருக்கிறதென்றால், அந்த பெண்ணைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஆசை  தொற்றிக் கொள்ளவே, 26-ம் தேதியன்று இரவு வண்டி கட்டினார் சண்முகராஜ். ஆனால் அந்த பெண், எங்களைத் தேடி நீங்கள் வர வேண்டாம்.. நானே வருகிறேன் என கூறியிருக்கிறார். சொர்க்கம் பக்கத்தில் என உற்சாகம் பொங்க ஆடிப்பாடிய சண்முகவேலின் பர்னிச்சர் கடைக்கு புஷ்பலதா என்ற பெண் வந்துள்ளார். 

தன்னுடன் போனில் பேசியவர் திவ்யா.. ஆனால் வந்து நிற்பவர் புஷ்பலதா.. சரி.. பெயரில் என்ன இருக்கிறது என நினைத்தவர் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்து அப்படியை படுத்துக் கொண்டார். மசாஜ் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் திடீரென அறைக்குள் 2 பேர் புகுந்து சண்முகராஜை மிரட்சிக்குள்ளாக்கினர். 

மேலும் படிக்க | நான் யார் தெரியுமா...? இன்ஸ்டா செலிபிரிட்டி... ! டிராபிக் போலீசிடம் வாக்குவாதம் செய்த இளைஞரின் வீடியோ..!

புஷ்பலதா மடியில் படுத்துக் கிடந்த சண்முகராஜை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த அந்த கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டது. தன்னை அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த கும்பலை சமாளிக்க முடியாத சண்முகராஜ், அணிந்திருந்த 1 பவுன் மோதிரம், பணம் மற்றும் 3 ஏ.டி.எம். கார்டுகளை அவர்களிடம் கொடுத்தார். 

ஆன வரை ஆகி விட்டது. வந்த வேலையையாவது முடித்துச் செல்வோம் என திரும்பினால் மசாஜ் செய்ய வந்த புஷ்பலதாவும் அவர்களோடு கம்பிநீட்டினார். நல்லவேளையாக ஆடைகளை அந்த கும்பல் பறித்துச் செல்லாத காரணத்தால் அணிந்திருந்த ஆடைகளோடு வீடு திரும்பினார் சண்முகராஜ். 

மேலும் படிக்க | குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்..! கர்ப்பிணி மருமகள் மீது தீ வைத்த மாமனார்...!

மசாஜ் செய்வதாக ஏமாற்றி சென்ற கும்பல் சண்முகராஜின் ஏ.டி.எம். கார்டில் இருந்து 22 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றது மட்டுமல்லாமல் செல்போனில் தொடர்பு கொண்டு 2 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளனர். 

இதையடுத்து பரிதாபத்துக்குள்ளான சண்முகராஜ், பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்த போலீசார், சம்பவம் செய்த கோகுல்ராஜ், யுவராஜ் மற்றும் மசாஜ் செய்வதற்கு வந்த மன்மத சுந்தரி புஷ்பலதா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | பிரபல ரவுடி கைது...! தலைமறைவாக இருந்தவரை மடக்கி பிடித்த போலீசார்...!