ஏற்கனவே 3 கணவருடன் கருத்து வேறுபாடு... இதில் கள்ளக்காதல் வேற.! அதற்கு குழந்தை இடையூறாக இருப்பதால் கொடூரமாக கொன்ற தாய்!!

நீலகிரி மாவட்டம் உதகையில் ஒரு வயது குழந்தையை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். 

ஏற்கனவே 3 கணவருடன் கருத்து வேறுபாடு... இதில் கள்ளக்காதல் வேற.! அதற்கு குழந்தை இடையூறாக இருப்பதால் கொடூரமாக கொன்ற தாய்!!

உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் - கீதா தம்பதியினர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களது முதல் மகன் நித்தீஷ் தந்தையுடனும், இரண்டாவது மகன் நித்தின் தாய் கீதாவுடனும் வசித்து வந்துள்ளனர். கடந்த மாதம் குழந்தை நித்தின் திடீரென மயங்கி விழுந்ததால், கீதா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்த புகாரின்பேரில் உதகை நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கீதாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் முடிந்த நிலையில், மூன்றாவதாக கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் குழந்தை நித்தினை தாய் கீதா சரியாக பராமரிக்காமல் இருந்தது தெரியவந்ததால் சந்தேகமடைந்த போலீசார், நித்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பினர். அதில் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து கீதாவிடம் போலீசார் கேட்டபோது, கள்ளத்தொடர்புக்கு இடையூறாக குழந்தை இருந்ததால், குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவை வாயில் ஊட்டி விட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து கீதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.