சாலையில்  சென்றவரை வழிமறித்து கழுத்தறுத்து கொலை...

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பட்டப்பகலில் சாலையில்  சென்றவரை வழிமறித்து கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சாலையில்  சென்றவரை வழிமறித்து கழுத்தறுத்து கொலை...

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பட்டப்பகலில் சாலையில்  சென்றவரை வழிமறித்து கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது48) விவசாயியான இவர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.  ரவி நேற்று மதியம்  கருப்பம்புலம் கடைவீதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது அவரது வீட்டுக்கு அருகே யாரோ இவரை வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்து, வயிற்றில் காத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்று விட்டனர்.

ரவி ரத்தவெள்ளத்தில் சாலையோரம் உயிருக்கு போராடிக் கொண்டு கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்துள்ளதா? என்றும் கொலையை ஒருவர் செய்தாரா ?அல்லது கூட்டாக செய்து உள்ளனரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.