கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்.... தொடரும் விசாரணை!!

கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்.... தொடரும் விசாரணை!!

மன்னர் வளைகுடா கடல் வழியாக இராமேஸ்வரம் மண்டபத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் தெற்கு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது மண்டபத்தைச் சேர்ந்த மீன் பிடிப்பதற்கு உதவும் பிளாஸ்டிக் பைப்பர் படகு ஒன்று தெற்கு மீன் பிடி துறைமுகம் நோக்கி வந்தது.

மர்ம பொருள்:

அந்த படகை நிறுத்தி சோதனை செய்ய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முயன்ற போது படகில் இருந்த நபர்கள் படகில் இருந்த மர்ம பொருள் ஒன்றை கடலில் வீசினர்.  இதையடுத்து படகை மடக்கி பிடித்த  இந்திய கடலோர காவல் படையினர் படகில் இருந்த மூன்று நபரை பிடித்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர  காவல் படை  முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  அவர்கள்  அளித்த தகவலின் படி வேதாளையை சேர்ந்த  நபருக்கு இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததாகவும், கடலோர காவல் படையினரை கண்டதும்  கடலில் வீசியதாகவும்  தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தேடி:

இதையடுத்து படகில் இருந்து கடலில் வீசப்பட்ட அந்த மர்ம பொருளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படை தொடந்து இரண்டு நாட்கள் தேடி மூட்டை ஒன்றை எடுத்தனர்.  

இருந்தது என்ன?:

அதில் 17.7 கிலோ தங்கம்  கைப்பற்றப்பட்ட  நிலையில் படகிலிருந்த மண்டபம் நாகூர் கனி சௌபர்சாதிக்,  மரைக்காயர்பட்டினம் முகமது சமீர் , என மூன்று பேரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மண்டபம்  ஜகான்கீர் மற்றும் வேதாளையை சேர்ந்த சாதிக் அலி, அசாருதீன் உள்ளிட்ட மேலும் 3 பேரை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மதுரை சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிக்க:   அரசை எதிர்த்து.... வெற்றி பெறுமா மாணவர்கள் போராட்டம்?!!