பைக்கில் சென்ற திமுக பிரமுகரை வெட்டிக்கொன்ற மர்மநபர்கள்!  

சென்னை அண்ணாநகர் அருகே பைக்கில் சென்ற திமுக பிரமுகரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பைக்கில் சென்ற திமுக பிரமுகரை வெட்டிக்கொன்ற மர்மநபர்கள்!   

சென்னை அண்ணாநகர் அருகே பைக்கில் சென்ற திமுக பிரமுகரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை டி.பிசத்திரம் 16வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார். தண்ணீர் கேன் போடும் தொழில் செய்யும் இவர் திமுகவின் 102வது வட்ட அவைத்தலைவராக உள்ளார். நேற்று  இரவு சம்பத்குமார்  அண்ணாநகருக்கு வேலை நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் சென்றார். அண்ணாநகர் போகன் வில்லா பூங்கா அருகே சென்ற போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சம்பத்தை வழிமறித்தது. தொடர்ந்து கத்தியால் சரமாரி சம்பத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். 

சம்பவயிடத்திற்கு சென்ற போலீசார் சம்பத் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பி ஓடிய கும்பலை தேடிவருகின்றனர்.