ஓட்டுனர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு 43 லட்சத்தை அபேஸ் பண்ணிய மர்ம நபர்கள்!!

ஓட்டுனர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு  43 லட்சத்தை அபேஸ் பண்ணிய  மர்ம நபர்கள்!!

தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, 43 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ரியல் எஸ்டேட் அதிபர் நரசய்யா என்பவர் வீடு விற்பனை சம்பந்தமாக சித்திப் பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர், தான் புதிதாக கட்டி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை வேறு ஒருவருக்கு விற்று அதற்கான பணத்தை பெற்றுள்ளார். பணத்தை தனது கார் ஓட்டுனரிடம் கொடுத்து பணத்துடன் காரில் இருக்குமாறு தெரிவித்து விட்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் சென்றுள்ளார்.

அப்போது, நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர்,  கார் கண்ணாடியை உடைத்து ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, 43 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.