செயின் பறிப்பில் ஈடுபட்டு உயிரைவிட்ட இளைஞர்..!

கன்னியாகுமரியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செயின் பறிப்பில் ஈடுபட்டு உயிரைவிட்ட இளைஞர்..!

அருமனை பகுதியை சேர்ந்த பிரேமிகா நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார். வழக்கம்போல பணியை முடித்துவிட்டு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் இரண்டு மர்ம நபர்கள் 10 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த போது மருமாமூடு பகுதியில் இரண்டு பேர் விபத்தில் சிக்கி இறந்ததை அறிந்து அங்கு சென்றனர்.

அப்போது அவர்களிடம் 10 சவரன் தங்க செயின் இருந்துள்ளது. அவர்களில் சஜாதுஹான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த அமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.