காதலித்த இரு சிறுவர்கள் தற்கொலை!

பண்ருட்டி.அருகே காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்த இரு சிறுவர்கள் தற்கொலை!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ஒறையூர் கிராமத்தைச் சேர்ந்த ரசிகா (வயது 15 ) என்பவர், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் அதே ஊரைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 19) என்ற பாலிடெக்னிக் மாணவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மாணவி வீட்டுக்கு தெரிய வந்ததால் மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 14ம் தேதியன்று, மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, காதலன் ஆகாஷ் மனம் உடைந்து காணப்பட்டு வந்த நிலையில், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி, உடல்கூறு ஆய்வுக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், மாணவர் உயிரிழந்த சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.