கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் படுகொலை...

கள்ளக்காதல் தொடர்பாக ஆட்டோ டிரைவர் வெடிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் படுகொலை...

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்தி நகர் சேர்ந்தவர் சக்திவேல், களத்துமேடு பகுதியை சேர்ந்தவர்சுமன், இருவரும் ஆட்டோ ஓட்டுநர். இவர்கள் இருவருக்கும் அதே பகுதி சேர்ந்த  பூமிகா திருமணம் ஆகி கணவர் இறந்த நிலையில் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

பூமிகாவும் சுமனும் தொடர்பில் இருந்த நிலையில் தற்பொழுது பூமிகா சக்திவேலுடன் பழக்கம் ஏற்பட்டதால் சக்திவேலுக்கும் சுமனுக்கும் இடையேவிரோதம் ஏற்பட்டது.

இதையடுத்து, நேற்று இரவு சமாதானம் பேசுவதாக கூறி சக்திவேலை அழைத்து சென்றுள்ளார். சுமன்பேச்சை நம்பி சக்திவேல் சென்றார். தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது பூமிகா விவகாரத்தில் தலையிட கூடாது என்று சுமன் கூறியதாக தெரிகிறது.

இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது சுமனும் அவனது நண்பர்களும் சேர்ந்து கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் டிஎஸ்பி சபியுல்லா, பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று கொலையான வாலிபர் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக சுமன் அவனது நண்பன் இருவரை பிடித்து  விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கள்ள காதலி பூமிகாவை போலீஸார் தேடி வருகின்றனர். 

ஆட்டோ டிரைவர் சக்திவேல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரி சக்திவேல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்  பண்ருட்டி சேலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.