மச்சினிச்சி உள்பட பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன்!! கையும் களவுமாக போலீசாரிடம் காட்டிக் கொடுத்த மனைவி

மச்சினிச்சி உள்பட பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன்!! கையும் களவுமாக போலீசாரிடம் காட்டிக் கொடுத்த மனைவி

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருகே, மனைவியின் சகோதரி உட்பட பல்வேறு பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். 

புதுவண்ணாரப்பேட்டை அருகேயுள்ள மார்க்கெட் பார்ம் பகுதியில் சேகர்-பிரித்திகா தம்பதி வசித்து வருகின்றனர். இந்நிலையில் சேகர் ஒரே குடியிருப்பில் வசித்து வரும் அவரது "மனைவியின்" சகோதரியை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட மனைவியின் சகோதரி பிரித்திகாவிடம் கூறவே, அவர் சேகரின் செல்போனை அவருக்கே தெரியாமல் ஆராய்ந்துள்ளார். அதில் தனது சகோதரியின் வீடியோ மட்டுமல்லாது அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்களின் சில முகம் சுளிக்கும் வீடியோக்களும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. 

உடனடியாக பிரித்திகா திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை பெற்று கொண்ட காவல் ஆய்வாளர் ஷீலா மேரி   வழக்கு பதிவு செய்து நீதிமன்ற விசாரனைக்கு பின்  குற்றவாளி சேகரை சிறையில் அடைத்தனர். ஆபாச வீடியோ எடுத்த கணவன் மீது தைரியமாக  புகார் கொடுத்த மனைவியை காவல் நிலையத்தில் சிலர் வெகுவாக பாராட்டி வந்தனர்.