வீட்டில் தனிமையில் இருந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட வாலிபர்!!

வீட்டில் தனிமையில் இருந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட வாலிபர்!!

வீட்டிற்குள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவி தனியாக வீட்டில் இருந்தபோது, அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட அப்பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவர், வீட்டுக்குள் புகுந்து மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை அறிந்த போலீசார் தட்சணாமுர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.