போலீசார் எனக்கூறி ரூ.50 லட்சம் கொள்ளை...
ஆந்திரா மாநிலத்தில் தங்க வியாபாரியிடம் போலிசார் எனக்கூறி 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் தங்க வியாபாரியிடம் போலிசார் எனக்கூறி 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்க வியாபாரியான சிரஞ்சீவி தங்கம் வாங்குவதற்காக 50 லட்ச ரூபாய் பணத்துடன் விஜயவாடா நோக்கி காரில் சென்றுள்ளார். குட்டலூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் எனக்கூறி சிலர் காரை வழிமறித்துள்ளனர். காரில் பணம் கடத்தப்படுவதாக கூறி, சோதனை நடத்திய அவர்கள், காரில் இருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்.
பணத்திற்கான ஆவணத்தை எடுத்துக்கொண்டு டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்து வாங்கிக் கொள்ள சொல்லிவிட்டு சென்றுள்ளனர். கூட்டலூர் காவல் நிலையத்தில் விசாரித்த போது பணத்தை கொண்டு சென்றது போலி போலீசார் என தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தலைமறைவாக இருந்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 47 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.