பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி... துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்...

மதுரை அண்ணாநகர்  பகுதியில் ஒரு பெண்ணை  கற்பழிக்க முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி... துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்...

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ஒரு பெண் நேற்று நள்ளிரவு நடந்து சென்றபோது  அந்த பெண்னை சிலர் காரில் கடத்தி செல்வதாக காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் வந்தது.   

உடனே சம்பந்தப்பட்ட அண்ணாநகர் காவல் நிலையம் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து செல்லுமாறு கேட்டுகொண்டனர். அந்த அடிப்படையில் அண்ணாநகர் ஆய்வாளர் சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் செண்பக தோப்பிற்கு சென்றபோது ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இருக்கின்ற ரவுடி குருவி விஜய்  மற்றும் கார்த்திக்  ஆகியோர் ஒரு பெண்னை கற்பழிக்க முயன்று இருக்கிறார்கள்.

உடனடியாக அவர்களை கைது செய்ய போலீசாரை ரவுடிகள் கட்டை மட்டும் கற்களை வைத்து தாக்கி இருக்கிறார்கள். தங்களை பாதுகாத்துக்கொள்ள சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் வைத்திருந்த கைத்துப்பாக்கி எடுத்து குருவி விஜயை காலில் சுட்டார். போலீசார் சுட்டதில் கீழே விழுந்த அவரை  சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.