ஓராண்டு தேடலுக்கு பின், “தீரன் அதிகாரம்” பாணியில் இருவர் கைது!!!

கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தின் தொடர்பில், இருவரை, ஓராண்டிற்குப் பின், ராஜஸ்தானுக்கே சென்று கைது செய்துள்ளனர் சீகாழி போலீசார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓராண்டு தேடலுக்கு பின், “தீரன் அதிகாரம்” பாணியில் இருவர் கைது!!!

சீர்காழியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த இரட்டைக் கொலை, தங்க நகை கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், பதுங்கி இருந்த முதல் குற்றவாளியான மணிஷ்யை நீதிமன்ற பிடிவாரண்ட்டின் படி  சீர்காழி போலீசார் விமானத்தில் ராஜஸ்தான் சென்று, கைது செய்து சீர்காழி காவல் நிலையம்  அழைத்து வந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவர் தன்ராஜ் சவுத்ரி (51). இவர் ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர். கடந்த 15 ஆண்டுகளாக சீர்காழியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறார். மேலும் இவர் பூம்புகார்  தருமகுளம்  பகுதியில் நகை அடகுகடை மற்றும் தங்க நகைகள் மொத்த விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அதிகாலை, இவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று வட மாநிலத்தவர்கள் தன்ராஜ் சவுத்ரியின் மனைவி ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு, தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நேஹல் ஆகிய இருவரையும் கட்டி போட்டுவிட்டு வீட்டில் இருந்த 12.5 கிலோ தங்க நகை மற்றும் ரூ6.75 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தன்ராஜ் சவுத்ரி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரினை திருடி தப்பி சென்றனர்.

இதனிடையே சீர்காழி அருகே எருக்கூர் சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்த வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளை, கொலையில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த மனீஷ், ரமேஷ் பட்டேல், மஹிபால் சிங் ஆகிய மூவரையும் மயிலாடுதுறை மாவட்டத்தின் அப்போதைய எஸ்பி ஸ்ரீநாதா தலைமையில் கொண்ட போலீசார் பிடிக்க சென்றனர். அப்பொழுது அதிரடிப்படை வீரர் சாலிம் என்பவரை கொள்ளையர்கள் தாக்கினர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அஹோலி கிராமத்தைச் சேர்ந்த மகிபால் சிங் சவுக்கு தோப்பில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். அங்கு மறைந்திருந்த ராஜஸ்தான் ஜோத்பூரை சேர்ந்த மணிஷ், ராஜஸ்தான் மாநிலம் கங்காவாஸ் பகுதியை சேர்ந்த ரமேஷ் பட்டேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து கொலை, கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிஷ், ரமேஷ் பட்டேல் மற்றும் இதில் தொடர்புடைய கும்பகோணம் கருணாராம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் மணிஷ் தலைமறைவாக ராஜஸ்தானில்  இருந்தார். அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவிட்டது. இதனை அடுத்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் தீரன் அதிகாரம் இரண்டு பட பாணியில் ராஜஸ்தான் மாநிலம் விரைந்து சென்றனர்.

அங்கு தங்கியிருந்து  மணிஷ் குறித்த தகவல்களை அம்மாநில போலீசாரின் உதவியுடன் மணிஷ் கைது செய்தனர்.  விமானம் மூலம்  இன்று அதிகாலை சென்னை கொண்டு வந்து , பின்னர் சீர்காழி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணைக்கு பின் மயிலாடுதுறை நீதிமன்றம் ஆஜர்படுத்த கொண்டு சென்றனர்.