அமெரிக்காவுக்கு செல்லவிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்...

சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு கடத்தவிருந்த 30 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவுக்கு செல்லவிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்...

சாா்ஜாவிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சென்னையை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற பயணியிடம் விசாரணை நடத்திய போது, அவர், தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என கூறிவிட்டு வெளியில் செல்ல முயன்றுள்ளார்.

பதட்டத்துடன் சென்ற அவரை பிடித்து நடத்தப்பட்ட சோதனையில் உள்ளாடைக்குள் வைத்து நூதன முறையில் தங்கத்தை பசையாக மாற்றி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதே போல், சென்னையில் இருந்து சரக்கு விமானத்தில் கொரியர் பார்சல்கள் அமெரிக்காவுக்கு செல்லவிருந்தது. இதனை சோதனை செய்த போலீசார்,  முக்கியமான டாக்குமெண்ட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த அந்த பார்சலை டெல்லியில் இருந்து அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகமடைந்த அதிகாரிகள் சோதனை செய்ததில், பார்சலுக்குள் 10 ஆயிரத்து நூறு போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அனுப்பியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.