மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியருக்கு 18 ஆண்டு சிறை...

பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியருக்கு, புதுச்சேரி நீதிமன்றம் 18 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியருக்கு 18 ஆண்டு சிறை...

புதுச்சேரி மேட்டுபாளையம் பகுதியை  சேர்ந்த ரஞ்சித் டியூசன் சென்டர் நடத்தி வந்தார். இவரது டியூசன் சென்டருக்கு வந்த  10ம் வகுப்பு பயிலும், 16 வயது சிறுமிக்கு ரஞ்சித் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, கடந்த  2016ம் ஆண்டு நவம்பர் மாதம், ரஞ்சித் மீது போக்சோ, பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலிசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி  ரஞ்சித்துக்கு போக்சோ பிரிவின் கீழ் 10 ஆண்டுகள், பலாத்காரம் பிரிவின் கீழ் 7 ஆண்டுகள், கொலை மிரட்டல் பிரிவின் கீழ் ஒராண்டு சிறை தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கினார்.