ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... அத்துமீறிய அரசு பஸ் கண்டக்டர் கைது...

விழுப்புரம் அருகே அரசு பேருந்தில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார்.

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... அத்துமீறிய அரசு பஸ்  கண்டக்டர் கைது...

விழுப்புரம் கோனூர் பகுதியை சேர்ந்த திருமணமான 20 வயது கல்லூரி மாணவி சென்னை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரி முடிந்து தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் கோனூர் பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு என்பதாலும் பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்த காரணத்தாலும் நடத்துனர் சிலம்பரசன் என்பவர் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்கள் செய்து வந்துள்ளார். பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் இவர் இறங்கும் இடத்திற்கு முன்பாக பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாத சூழ்நிலையில் பேருந்து நடத்துனர் சிலம்பரசன் மற்றும் ஓட்டுநர் அன்புச்செல்வன் உள்ளிட்ட இரண்டு நபர்கள் கல்லூரி பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.  

இந்நிலையில் பெண் கூச்சலிட அக்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் அவரை மீட்டனர். அந்தப் பெண் காணை காவல்நிலையத்தில் தனது கணவருடன் புகார் அளித்திருந்த நிலையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவர் மீதும் தனியாக இருந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்து இரண்டு நபர்களையும் கைது செய்து காணை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்தில் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.