பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை... போக்சோ சட்டத்தில் தந்தை கைது...

பெரம்பலூர் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.

பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை... போக்சோ சட்டத்தில் தந்தை கைது...

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர்  பெரியசாமி (42). இவரது 13 வயது மகள் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று  காலை பெரியசாமி தனது மகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றார்.

இதை பார்த்த அவரது மனைவி ராதா (38) கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்  ஜெயசித்ரா போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிந்து பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.