உன் வீட்டை இடி பிரச்சனை தீரும்.. பணத்தை சுருட்டிய அண்டா சாமியார் கைது!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த சக்தி என்கிற அண்டா சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உன் வீட்டை இடி பிரச்சனை தீரும்.. பணத்தை சுருட்டிய அண்டா சாமியார் கைது!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த சக்தி என்கிற அண்டா  சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விளாத்திகுளத்தைச் சேர்ந்த சக்தி என்பவர் சக்தி வராகி என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து குறிசொல்லி வருகிறார். இவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கரிசல்குளத்தை சேர்ந்த தங்கப்பேச்சியம்மாள் என்பவர் குறி கேட்க சென்றுள்ளார். அப்போது அவரிடம் போலி சாமியார் சக்தி இறந்து போன உன் கணவரின் ஆன்மா சாந்தி அடையாததால், உன் வீட்டை இடித்து மாற்றி அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் அவரிடம் இருந்து இரண்டரை பவுன் தங்க செயினை பெற்றுக்கொண்டு முப்பதாயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அந்த பெண்ணும் சாமியார் கூறியவாறு வீட்டை இடித்துள்ளார். அதன் பின்னும் பிரச்சனைகள் சரியாகாததால் மீண்டும் சாமியாரை தேடி வந்துள்ளார்.

அப்போது அவரிடம் தாலி, மோதிரம் ஆகியவற்றின் உருக்கி தங்கமாகவும் ரூபாய் 3 ஆயிரத்து 500 பணத்தையும் கொண்டு வா உனக்கு தாயத்து செய்து தருகிறேன். அதை பூஜை அறையில் வைத்து வணங்கி வந்தால் உன் பிரச்சனைகள் தீரும் என்று கூறியுள்ளார். தங்க பேச்சியம்மாளும் தங்கம் மற்றும் பணத்தை கொடுத்து உள்ளார். ஆனால் சாமியார் கூறியபடி தாயத்து செய்து கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் தங்க பேச்சியம்மாள் போலி சாமியார் சக்தியிடம் சென்று கேட்டபோது உனக்கு செய்வினை வைத்து கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலி சாமியார் சக்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது .