முன்விரோதம் காரணமாக இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு...

சேலத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் சிலரை மர்ம நபர்கள்  ஓட ஓட விரட்டி அரிவாளால்  சரமாரியாக வெட்டி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதம் காரணமாக இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு...

சேலத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் சிலரை மர்ம நபர்கள்  ஓட ஓட விரட்டி அரிவாளால்  சரமாரியாக வெட்டி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிச்சிப்பாளையம்  எஸ்.எம்.சி காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்லதுரையை  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த 20 பேர் சேர்ந்து சரமாரியாக வெட்டிகொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.   இந்நிலையில் செல்லதுரையின் ஆதரவாளர்கள் நேற்று இரவு அவர்களின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது,  பதினைந்திற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அவர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த  நான்கு பேரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்திய 15க்கும் மேற்பட்டோரை தேடிவருகின்றனர்.