டாக்டரை கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு... தலைமறைவான குற்றவாளிகள் 3 பேர் கைது...

மதுரவாயல் பகுதியில் டாக்டரை கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாக்டரை கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு... தலைமறைவான குற்றவாளிகள் 3 பேர் கைது...

மதுரவாயில் அடுத்த வானகரம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட்ராமன். இவர் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு அண்ணா நகரில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது மதுரவாயல் மேம்பாலம் அருகே வந்தபோது அவரை வழி மறித்த மர்ம கும்பல் இவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் இவர் செல்போனை தர மறுத்ததால் ஆத்திரத்தில் அவர்கள் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் தலை,  கைகளில் வெட்டி விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர்  இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (21) அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (26) சரண் (எ) பச்சைக்கிளி (19) ஆகிய மூவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த மதுரவாயல் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.