பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி தற்கொலை முயற்சி... கராத்தே மாஸ்டர் மீது சரமாரி தாக்குதல்...
சேலம் அருகே தனியார் பள்ளியில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டரை பொதுமக்கள் சரமாரி தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கருமந்துறை பகுடுபட்டு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கராத்தே மாஸ்ட்டராக வேலை பார்ப்பவர் ராஜா.இவர் மாணவிகளிடையே பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதேபள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விசாரித்த போது கராத்தே மாஸ்டர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடமும் காவல்நிலையத்திலும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அத்துடன் அதே பள்ளியில் கராத்தே மாஸ்டர் ராஜா பணியாற்றி வந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர், மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர் மேலும் கராத்தே மாஸ்டர் ராஜாவை அடித்து உதைத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
அத்துடன் ராஜாவை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத தனியார் பள்ளி உரிமையாளர் ஒட்பட இருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.