சிவசங்கர் பாபாவிடம் மாணவிகளை அழைத்து சென்ற ஆசிரியை சுஷ்மிதா கைது!!

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்து மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவசங்கர் பாபாவிடம் மாணவிகளை அழைத்து சென்ற ஆசிரியை சுஷ்மிதா கைது!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைதான நிலையில், அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தாத்தாவாக, குருவாக தான் மாணவிகளை சிவசங்கர் பாபா தொடுவார் என்றும், அவை அனைத்தும் "குட் டச்" தான் எனவும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் விசாரணைக்காக, சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ. டி. அலுவலகத்திற்கு சுஷில்ஹரி பள்ளியின் 3 ஆசிரியைகள் அழைத்து வரப்பட்டனர். சுஷ்மிதா, கருணா, மீரக் ஆகிய 3 பேரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய போலீசார், சிவசங்கர் பாபாவிடம் மாணவிகளை அழைத்து சென்றதாக சுஷ்மிதாவை கைது செய்தனர். சுஷ்மிதா இதே பள்ளியில் பயின்று, தற்போது ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.