நல்ல வேல யாரும் பாக்கல.. பெண்ணின் செயலால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள்..!

நல்ல வேல யாரும் பாக்கல.. பெண்ணின் செயலால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள்..!

திருக்கோவிலூர் நகர் பகுதியில் பிரபல துணிக்கடையில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகளை லாபகமாக திருடி சென்ற பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முன்னிட்டு கைவரிசை காட்டிய பெண்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள வடக்கு வீதியில் பிரபல தனியார் துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், மாலை தீபாவளி பண்டிகைக்கு துணி எடுப்பது போல் வந்த பெண் ஒருவர் பட்டு  பிரிவில் பட்டு புடவை மற்றும் பட்டு வேட்டிகள் உள்ளிட்டவைகளை விலைக்கு வாங்குவது போல் பார்த்துவிட்டு பின்னர் திரும்பி சென்றுள்ளார்.

சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

பின்னர், விற்பனையாளர்கள் அந்த பெண்ணின் மேல் வைத்த சந்தேகத்தின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்தப் பெண் துணிகள் வாங்குவது போல் பாசாங்கு செய்து, பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டுப் புடவை மற்றும் வேட்டி சட்டைகளை லாவகமாக திருடி தான் வைத்திருந்த கைப்பையில் எடுத்துச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புடவைகளை திருடிச் சென்ற அந்த பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.