8 வயது சிறுவனின் முதுகு, கால், கைகளில் சூடு வைத்த தந்தையின் கள்ளக்காதலி...

வேலூர் குடியாத்தம் அருகே 8 வயது சிறுவனின் உடல் முழுவதும் சூடு வைத்து சித்தரவதை செய்த தந்தையின் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

8 வயது சிறுவனின் முதுகு, கால், கைகளில் சூடு வைத்த தந்தையின் கள்ளக்காதலி...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜீவா நகர் பகுதியை சேர்ந்த சேட்டு (35 ) அவரது மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு சித்தார்த் (10) நித்திஷ்( 8) ஆகிய மகன்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வேணி என்பவருடன் சேட்டு கள்ளத்தொடர்பில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தாயை இழந்த குழந்தைகள் அவர்களுடைய தந்தை சேட்டுவுடன் வசித்து வந்தனர். வேணி அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சேட்டு உடன் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.

இதனிடையே முதல் மனைவியின் குழந்தைகளான சித்தார்த் மற்றும் நித்திஷ் ஆகியோரை வேணி சித்ரவதை செய்து வந்துள்ளார் குறிப்பாக நித்தீஷின் முதுகு, கை, கால்கள், பாதம், மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சூடு வைத்து சித்தரவதை செய்து வந்துள்ளார். இதனுடன் இன்று நித்திஷ் அவருடைய வீட்டில் இருந்து தப்பித்து அருகில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு ஓடி வந்து நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் நித்திஷை காவல் நிலையம் அழைத்து வந்து பெரியம்மா நிஷாந்தி கொடுத்த புகாரின்பேரில் கள்ளக்காதலி வேணியை கைது செய்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தை சேட்டு வேலைக்கு வெளியே சென்று உள்ளதால் அவரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயமடைந்த நித்திஷை மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. சிறுவனின் உடல் முழுவதும் அவரது தந்தையின் கள்ளக்காதலி சூடு வைத்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.