தாயையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 3 வயது மகன்...தந்தையின் அஜாக்கிரதை..விளையாட்டு வினையாக முடிந்த சோகம்...!

தந்தையின் துப்பாக்கியை சிறுவன் கையில் எடுத்து விளையாடியதில் தவறுதலாக குண்டு பாய்ந்து தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

தாயையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 3 வயது மகன்...தந்தையின் அஜாக்கிரதை..விளையாட்டு வினையாக முடிந்த சோகம்...!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில் வசித்து வந்த  டீஜா பென்னட் என்பவர் தனது மகனுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு, மகனை காரின் பின் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, அவர் காரை ஓட்டுவதற்காக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தார்.

அப்போது அந்த சிறுவன், காரின் பின் இருக்கையில் இருந்த தனது தந்தையின் துப்பாக்கியை கையில் எடுத்து விளையாடி கொண்டிருந்தான். அதில்  தவறுதலாக காரின் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த பென்னட்டின் முதுகுப்பகுதியில் குண்டு பாய்ந்தது. இந்த விபத்தில் பென்னட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார்.  

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார், அந்த  சிறுவனின் தந்தை ரோமல் வாட்சன் மீது குற்ற வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து தகவல் தெரிவித்த போலீசார், அவர் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியை காரில்  கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் இந்த அதிர்ச்சியான துப்பாக்கி சூடு சம்பவத்திலிருந்து மீண்டு வர அந்த குழந்தைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனை கொடுத்து வருவதாகவும், ஒரு நொடியில் அவர்களது வாழ்க்கையே மாறிவிட்டது என்றும் டால்டன் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.