கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நண்பனை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கொடூரம்...

வாணியம்பாடி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட லாரி உரிமையாளர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நண்பனை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கொடூரம்...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வன்னிய அடிகளார் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசனும், சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த சங்கரும் நண்பர்கள் ஆவர். தனது நண்பரான சங்கருக்கு வெங்கடேஷன் 10 லட்ச ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். வெகு நாட்கள் ஆகியும் கடனை திருப்பி கொடுக்காததால் நேற்று சங்கர் வீட்டிற்கு சென்று கடனை கேட்டதால் இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  

ஒரு கட்டத்தில் சங்கர் தமது வீட்டில் இருந்த இரும்பு கம்பி எடுத்து வெங்கடேசனை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூருக்கு கொண்டு சென்ற வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சங்கர் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகியோரை தேடி வருகின்றனர்.