மர்ம பொருளை கடித்த நாய்: வாய் சிதறி பலி

திருவிடைமருதூர் பந்தநல்லூர் அருகே கோவில்ராமபுரம் குடியான தெருவில் கீழே கிடந்த மர்ம பொருளை கடித்த நாய் வாய் சிதறி பலியானது.

மர்ம பொருளை கடித்த நாய்:  வாய் சிதறி பலி

திருவிடைமருதூர் பந்தநல்லூர் அருகே கோவில்ராமபுரம் குடியான தெருவில் கீழே கிடந்த மர்ம பொருளை கடித்த நாய் வாய் சிதறி பலியானது.

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே கோயில்ராமபுரம் குடியான தெருவில் வசிக்கும் கண்ணையன் மகன் அருள் இவர் திமுகவில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளராகவும் இவரது மனைவி மகேஸ்வரி இப்பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது வீட்டின் அருகே நேற்றிரவு பலத்த சத்தத்துடன் வெடி வெடித்தது வெளியே வந்து பார்த்தபோது இதே பகுதியில் உள்ள தெருநாய் ஒன்று வாய் சிதறி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பலியானது. இதனை அடுத்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எவ்வாறு வெடி வெடித்தது என்பது குறித்தும் நாய் மர்ம பொருளை கடித்ததால் இச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அந்த மர்ம பொருள் வயல்வெளளிகளில் நரிகளை வேட்டையாட நரிக்குறவர்கள் பயன்படுத்தும் வெங்காய வெடியாக இருக்கலாம் எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது