நடைமேடை டிக்கெட் எங்கே? என்று கேட்டு பயணியை கொடூரமாக தாக்கிய காவலர்!!

நடைமேடை டிக்கெட் எங்கே? என்று கேட்டு பயணியை கொடூரமாக தாக்கிய காவலர்!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குடிபோதையில் இருந்த  காவலர் ஒருவர், நடைபாதை டிக்கெட் எடுக்கவில்லை எனக் கூறி, பயணியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் சபரி குமார், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணியை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது டெல்லி செல்வதாக கூறிய அந்நபர், ரயில் டிக்கெட்டையும் காட்டியுள்ளார்.

ஆனால், குடிபோதையில் இருந்த சபரிகுமார், நடைமேடை டிக்கெட் எங்கே? எனக் கேட்டு பயணியை தாக்கியுள்ளார். மேலும், ரயில்வே உதவி ஆய்வாளரையும் கீழே தள்ளி ரகளை செய்துள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியான நிலையில், சபரிகுமார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆணையர் கார்த்திகேயன் உறுதி அளித்துள்ளார்.