மனைவியுடன் கள்ளதொடர்ப்பு வைத்திருந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர்...

ஆம்பூர் அருகே மனைவியுடன் கள்ளதொடர்ப்பு வைத்திருந்த நபரை கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மனைவியுடன் கள்ளதொடர்ப்பு வைத்திருந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர்...

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு, லட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். டில்லிபாபு சலவைதொழில் செய்து வருகிறார். இதற்கிடையில் இவரது மனைவி லட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியுள்ளது. இதனையறிந்த கணவர் டில்லிபாபு பலமுறை தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மணமுடைந்த மனைவி லட்சுமி கணவர் டில்லிபாபுவை பிரிந்து கடந்த 6 மாதங்களாக  ஆம்பூர் அருகே  ஆலாங்குப்பத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் சென்று தங்கி வந்துள்ளார்.

இருப்பினும் கள்ளகாதலனான கோவிந்தசாமியுடனான கள்ளதொடர்பை கைவிடாத லட்சுமி அடிக்கடி அவரை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கணவர் டில்லிபாபு, கோவிந்தசாமியின் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் ஆத்திரம் தீர சரமாறியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

கோவிந்தசாமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை  மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோவிந்தசாமி ஏற்கனவே இறந்தவிட்டார் என கூறினர். இதற்கிடையில் கோவிந்தசாமியை கொலை செய்த டில்லிபாபு தாமாக முன்வந்து காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், கொலை சம்பவம் குறித்து  விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.