மருமகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட மாமியார்...

மருமகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட மாமியார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருமகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட மாமியார்...

உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தனது 25 வயது மருமகனை காதலித்து வந்துள்ளார். 2 பேரக் குழந்தைகளுக்கு பாட்டியான அந்தப் பெண், தன்னை விட பாதி வயதுள்ள மருமகன் மீது காதலில் விழுந்துள்ளார்.

இவர்களது கள்ள தொடர்புக்கு எதிர்ப்பு அதிகமானதால், காதல் ஜோடிகள் கடந்த 10 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினர். வேறு இடத்தில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பிய அவர்கள் பழைய பஞ்சாயத்தை மறந்து குடும்பத்தினர் தங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் வந்துள்ளனர்.

மேலும் தங்கள் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் அதனால் ஒன்றாகத்தான் வாழ்வோம் என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர். இதை ஏற்காததால் குடும்பத்தினர், அவர்களுடன் சண்டையில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்க்காரர்கள் ஒன்று கூடி, அவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரச்னை இந்த விவரம் போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து இந்த திருமணத்தை ஏற்க முடியாது என்றும் பொது ஒழுக்கத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என்ற பிரிவில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், மாமியாரையும் மருமகனையும் கைது செய்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.