குடிக்க பணம் கொடுக்க மறுப்பு... சித்தியை கொலை செய்த நபர் கைது...

வேலூர் அருகே குடிக்க பணம் கொடுக்க மறுத்த சித்தியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

குடிக்க பணம் கொடுக்க மறுப்பு... சித்தியை கொலை செய்த நபர் கைது...

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லட்சுமண கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவருடைய வீட்டிற்கு இவருடைய அக்கா மகன் சரவணன் சென்றுள்ளார். அப்போது குடிக்க பணம் கேட்டு சித்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சரவணன் கோவிந்தம்மாளை சித்தி என்றும் பாராமல் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.