புகார் அளிக்க வந்த இளைஞரை தாக்கும் போலீசார் - சமூக வலைதளத்தில் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு!

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் புகார் அளிக்க வந்த இளைஞரை போலீசார் தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகார் அளிக்க வந்த இளைஞரை தாக்கும் போலீசார் - சமூக வலைதளத்தில் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு!

சஞ்சீவிராயனி கிராமத்தை சேர்ந்தவர் வேணு. இவர் தனது மாற்று திறனாளி தாய்க்கு அரசு வழங்கும் உதவித்தொகை வழங்கப்படவில்லை என கூறி ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தாமோதர் ரெட்டியிடம் புகார் தெரிவித்தார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து புகார் அளிக்க இளைஞர் சிலமஞ்சரி காவல் நிலையத்திற்கு சென்றார். ஆனால் அங்கு பணியில் இருந்த எஸ். ஐ. ரங்க யாதவ் தகாத வார்த்தைகளில் பேசி இளைஞரை கடுமையாக தாக்கினார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், எஸ். ஐ. மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.