ஆசை யாரை விட்டது... 80 வயதில் வந்த திருமண மோகம்!! ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தை அறுத்து அடித்தே கொன்ற மகன்

ஆத்திரத்தில் தந்தையை அவரது மகனே அடித்து கொலை செய்த சோகம்!!

ஆசை யாரை விட்டது... 80 வயதில் வந்த திருமண மோகம்!! ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தை அறுத்து அடித்தே கொன்ற மகன்

80 வயது முதியவர் மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ததால் ஆத்திரத்தில் அவரது மகன் அடித்துக் கொன்ற சம்பவம் புனேவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் புனேவில் ராஜ்குருநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். சொந்தமாக பேக்கரி வைத்து நடத்திவரும்  இவர்  தனது வீட்டில் தந்தை சங்கர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

வீட்டில் இருக்கும் 80 வயது முதியவரான சேகரின் தந்தை சங்கர்  தனது மனைவி உயிரிழந்ததை அடுத்து தன்னுடைய பெரும்பான்மையான நேரங்களை செய்தித்தாள்கள் வாசிப்பதிலும் செல்போனை பார்ப்பதிலுமே செலவழித்து வந்துள்ளார். அவ்வப்போது, சேகரின் தந்தை, சில மாதங்களாகவே செய்தித்தாள்களில் வெளியாகும் திருமணத் தகவல்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதாகவும், சில தகவல் மையங்களில் அவரின் பெயரை பதிவு செய்திருப்பதாவும் சேகரின் மனைவி சேகரிடம் புகார் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று சேகர் மதிய உணவிற்காக தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது வீட்டில் அவரது தந்தை மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சேகர் தனது மனைவி கூறியதை மனதில் வைத்துக்கொண்டு தந்தையிடம் திருமணத் தகவல் மையத்தில் உங்கள் பெயரை பதிவு செய்துள்ளீர்களா? என்று கேட்டுள்ளார். அதை அவரது தந்தை மறுத்ததால், அவரது செல்போனை வாங்கி பார்த்த போது அவர் திருமணத் தகவல் மையத்தில் பதிவு செய்ததும் அதற்கான கட்டணம் செலுத்தியிருந்ததும் தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த சேகர் தனது 80 வயதான தந்தை என்றும் பாராமல் கத்தியால் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி செய்துள்ளார். தொடர்ச்சியாக  கல் கொண்டு பலமாக தலையில் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் தலையை துண்டிக்கவும் முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து தானகவே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட சேகர் போலீசாரிடம் சரணடைந்தார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் ஐபிசி 302-ன் கீழ் வழக்குப்பதிவு சேகரை  கைது செய்துள்ளனர்.