சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியை தலைமறைவு... தனிப்படை அமைத்து தேடும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்...

சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில், சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியை தலைமறைவாகி உள்ளார்.

சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியை தலைமறைவு... தனிப்படை அமைத்து தேடும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்...
சுஷில் ஹரி பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆசிரியைகள் பாரதி, தீபா ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து வருவதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஆசிரியை தீபா வீட்டிற்கு சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் விரைந்தனர். ஆனால், சுதாரித்து கொண்ட பள்ளி ஆசிரியை தீபா, தமது வீட்டை பூட்டி விட்டு தப்பியோடி உள்ளார். அவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என கூறப்படுகிறது.
 
இதனையடுத்து தலைமறைவாகி இருக்கும் தீபாவை பிடிக்க, சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கிய மற்றொரு ஆசிரியை பாரதி, தற்போது வெளிநாட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.