வீட்டு வாசலில் அமர்ந்து ஆப்பிள் சாப்பிட்ட மூதாட்டியிடம் காதோடு நகையை அறுத்து கொண்டு ஓடிய திருடன்...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே  வீட்டு வாசலில் அமர்ந்து ஆப்பிள் சாப்பிட்ட மூதாட்டியிடம் மர்மநபர் காதில் இருந்த நகையை காதோடு அறுத்து கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வாசலில் அமர்ந்து ஆப்பிள் சாப்பிட்ட மூதாட்டியிடம் காதோடு  நகையை அறுத்து கொண்டு ஓடிய திருடன்...

 தாரமங்கலம் நகரில் வசித்து வருபவர் பிரகாசம், குப்பாயி தம்பதியினர். நேற்று மூதாட்டி குப்பாயி வீட்டு வாசலில் அமர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர், மூதாட்டியிடம் முகவரி கேட்டுள்ளார். அப்போது காது கேட்கவில்லை என்று கூறிய நிலையில், காதின் அருகே கூறுவது போல சென்ற வாலிபர், திடீரென கத்தியால் மூதாட்டியின் காதை தோட்டுடன் அறுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தம்கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மரம் நபரை தேடி வருகின்றனர்.