கள்ளக்காதலனுக்காக கணவனை தூக்கில் தொங்க விட்ட மனைவி... தற்கொலை நாடகமாடியது அம்பலம்...

கோவையில் கணவனை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியையும் கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலனுக்காக கணவனை தூக்கில் தொங்க விட்ட மனைவி... தற்கொலை நாடகமாடியது அம்பலம்...

கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்தவர் ராஜா. இவரது மனைவி ரீனா.  இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மனைவி ரீனா துடியலூர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து இவ்வழக்கை துடியலூர் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனையடுத்து ராஜா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சகோதரி மாலாதுடியலூர் போலீசில் புகாரளித்தார்.

ராஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவ்வழக்கை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் இறந்த ராஜாவின் மனைவி ரீனா மற்றும் கள்ளக்காதலன் சதீஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கணவனை கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக மனைவி நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.