சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி...! துரத்தி பிடித்த பொதுமக்கள்...!

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி...! துரத்தி பிடித்த பொதுமக்கள்...!

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிகால் பகுதியில் அதிக நடமாட்டம் உள்ள அண்ணா நுழைவு வாயில் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் கஞ்சா போதையில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, அந்தப் பெண் கழுத்தில் இருந்த செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டதால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள், இளைஞரை துரத்தி பிடித்து சாலையோரத்தில் உள்ள கம்பத்தில் நிற்க வைத்து சரமரியாக அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட கஞ்சா போதையில் இருந்த இளைஞரை காவல்துறையினர் காவல் நிலையத்தில் மாலை 6 மணிக்கு மேல் குற்றவாளிகளை தங்க வைக்க கூடாது என்பதற்காக வழக்கு பதிவு செய்யாமல், இளைஞரின் சுய விபரங்கள் ஏதும் பதிவிடாமல் அனுப்பி வைத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாவட்டத்தில் போதை பொருட்களை அறவே ஒழிக்கும் நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், இப்படியான  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.