12 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்... திருப்பூரில் 6 பேர் கைது...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் 12 டன்  குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

12 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்... திருப்பூரில் 6 பேர் கைது...

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் சோதனையில் ஈடுப்பட்ட போலீசார், கோழிப்பண்ணைகள், விசைத்தறி கூடம் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான 12 டன் குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சுந்தரபாண்டி, அந்தோணி ஜெகன், நவராஜ், குணசேகரன், அந்தோணிராஜ் , தானராஜ் ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார், மேலும், 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.