போதை மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த இருவர் கைது !

போதை மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த இருவர் கைது !

மும்பையில் இருந்து ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் இருவரை கைது செய்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில், மதுரவாயலில் பதுங்கியிருந்த கே.கே. நகரை சேர்ந்த சக்திவேல் மற்றும் ராமாபுரத்தைச் சேர்ந்த சிவா ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து,  300 போதை மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.