சாரய விற்பனையில் ஈடுபட்ட பெண்கள்!! குண்டர் சட்டத்தில் அதிரடியாக கைது!

சாரய விற்பனையில் ஈடுபட்ட பெண்கள்!! குண்டர் சட்டத்தில் அதிரடியாக கைது!

நாகப்பட்டினத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

தாமரைக்குளம் தென்கரை பகுதியை  சேர்ந்த  சத்யா மற்றும் வடக்கு நல்லியான் தோட்டம்  பகுதியை சேர்ந்த  முத்துலட்சுமி ஆகிய இருவரும் இணைந்து தேவூர், தெற்காலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அங்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதனைதொடர்ந்து அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.