யூ.கே.ஜி. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை...பள்ளி தாளாளர், ஆசிரியர் கைது!

யூ.கே.ஜி. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை...பள்ளி தாளாளர், ஆசிரியர் கைது!

யூகேஜி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பள்ளி தாளாளரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யூகேஜி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கெங்கை சூடாமணி கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான்கரை வயது சிறுமி ஒருவர் யூ கே ஜி படித்து வந்தார். அந்த சிறுமியை பள்ளி தாளாளரின் கணவரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான காமராஜ் என்பவர் சாக்லெட் வாங்கிக் கொடுத்து  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்த  போலீசார், காமராஜின் செல்போன் சிக்னலை வைத்து தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இருந்த காமராஜை கைது செய்தனர். 

மேலும் படிக்க: https://malaimurasu. com/posts/cover-story/Inauguration-of-the-Chief-Justice-of-the-Supreme-Court

சிசிடிவி காட்சிகள் ஆய்வு:

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், சம்மந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பள்ளி மாணவியின் வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இது தவிர மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் அறையை ஆய்வு செய்தார். தொடர்ந்து , தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டதோடு, சிசிடிவி காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேறு மாணவிகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளதா?:

இது தொடர்பாக, பள்ளி தாளாளர் பிரபாவதியையும் கைது செய்துள்ளதாகவும், வேறு மாணவிகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.