மனைவியை சேர்த்து வைக்கக்கூறி மச்சானை கொலை செய்த மாமா!  

ஓசூரில் கோபித்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கூறி ஆட்டோ ஓட்டுனர், மச்சானை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை சேர்த்து வைக்கக்கூறி மச்சானை கொலை செய்த மாமா!   

ஓசூரில் கோபித்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கூறி ஆட்டோ ஓட்டுனர், மச்சானை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனரான மாதேஷ். இவர்  சோனியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளநிலையில் கணவன் மனைவிக்கு இடையே அவ்வபோது சண்டை ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் கடந்த மாதம் சோனியா கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மாதேஷ் மது குடித்து விட்டு மனைவியின் அண்ணனான விக்கியிடம் சோனியாவை அனுப்பி வைக்குமாறு தகராறு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வாய் தகராறு முற்றி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாதேஷ்,  விக்கியை கண்ணிமைக்கும் நேரத்தில்  கத்தியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே விக்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மாதேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.