வாலிபர் வெட்டிக்கொலை....தப்பியோடிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வாலிபரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வாலிபர் வெட்டிக்கொலை....தப்பியோடிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள  கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் சுபாஷ். இவர் வத்திராயிருப்பு- கிருஷ்ணன் கோயில் சாலையில்  தனியார் இருந்த பார் முன்பு வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு காவல் துறையினர், முகத்தில் பலத்த வெட்டுக்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்த சுபாஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.