பரபரப்பான வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்!!

பரபரப்பான வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் வாடிக்கையாளரை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், துணிக்கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியானது.

வண்ணாரப்பேட்டை ஜீன்ஸ் பார்க் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை, வலுக்கட்டாயமாக அருகே இருக்கும் கடைகளுக்கு இளைஞர்கள் சிலர் அழைத்து செல்வதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அந்த இளைஞர்கள் மீது ஜீன்ஸ் பார்க் உரிமையாளர் தமிம் அன்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் போலீசார் அந்த இளைஞர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த இளைஞர்கள் நேற்று தமிம் கடைக்கு சென்று ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் அடித்துகொள்ளும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி காட்சியில் பதிவானது. தற்போது அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.