16 வயது காதலியை தேடி வந்த பள்ளி மாணவர்... நள்ளிரவில் திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்...

ஒரத்தநாடு அருகே 16 வயது பள்ளி மாணவ மாணவிக்கு திருமணம் செய்து வைத்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். 

16 வயது காதலியை தேடி வந்த பள்ளி மாணவர்... நள்ளிரவில் திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்...

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அக்கரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபு என்பவரின் மகள் இவர் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் காரியாபட்டியை சேர்ந்த செல்வம் என்பவரது பேரனுக்கும் நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் அந்த மாணவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது பள்ளிக் காதலியை தேடி அவரது சொந்த ஊரான அக்கரைவட்டம் கிராமத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக மாணவன் கவிதாவின் வீட்டு அருகே நின்று கொண்டிருந்ததைப் பார்த்த  பொதுமக்கள் யார் என்ன என விசாரித்துள்ளனர். இதில் தான் மாணவி கவிதாவை காதலித்து வருவதாகவும் இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருவதாகவும் அவரை பார்ப்பதற்காக வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நள்ளிரவில் மாணவண் மற்றும் மாணவி  இருவருக்கும் கல்யாணம் வேட்டி, சேலை உடை அணிந்து அங்கு உள்ள கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர். தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கரைவட்டம் கிராமத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். 

மாணவனின் வீட்டார்கள் வருவதற்குள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று  மணக்கோலத்தில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மாணவனின் தந்தை தேவேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும்  சம்பவ இடத்தற்கு சென்ற போலீசார் மணக்கோலத்தில் இருந்த மாணவன் மற்றும் மாணவி மற்றும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த அக்கரைவட்டம் வடக்கு தெருவைச் சேர்ந்த  கோபு, ராஜா, ராமன் அய்யாவு பேயன்,  நாடிமுத்து ஆகியோர் மீது  குழந்தைகள் திருமண  தடுப்புச் சட்டத்தின் வழக்குப்பதி கைது செய்தனர். மேலும் ஒருவரை போலிசார் தேடி வருகின்றனர்.