சிறையிலிருந்து வெளியே வந்த 'ரௌடி' செய்த காரியம்.. ஆத்திரத்தில் ஓட ஓட வெட்டிய நண்பர்கள்.. ஏன் இந்த கொலவெறி?

சிறையிலிருந்து வெளியே வந்த 'ரௌடி' செய்த காரியம்.. ஆத்திரத்தில் ஓட ஓட வெட்டிய நண்பர்கள்.. ஏன் இந்த கொலவெறி?

சென்னை கொளத்தூர் அருகே நண்பர் மனைவியுடன் தகாத உறவில் இருந்த பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பழனி. பிரபல ரவுடியான இவர் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்ற போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர், துரத்தி வந்து வெட்ட முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோடி வீடு ஒன்றில் மறைய முயன்ற அவரை, சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், அவரை கொலை செய்தது அவரது நண்பர்களான ஆதி மற்றும் சரண்ராஜ் என்பதும், சரண்ராஜ் மனைவியுடன் பழனி தகாத உறவில் ஈடுபட்டு வந்ததும், எச்சரித்தும் கைவிட மறுத்ததால் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தலைமறைவாகியுள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.